Monday 17 August 2009

செயற்கை விந்துகள் துள்ளும் உலகம்

ஒரு மாதிரியாக செயற்கையான விந்தணுக்களை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டனர். சமூகம், குடும்பம், ஆண் பெண் உறவு, உடலுறவு எல்லாவற்றிற்கும் பெரும் சவாலாக அமையப் போகும் ஒன்று என்று இப்பொழுதே குரல்கள் எழும்பத் தொடங்கிவிட்டன.

யுலை 9ஆம் திகதி லண்டனில் இருந்து வெளிவரும் ‘சன்’ பேப்பரில் ஒரு கார்ட்டூன் போட்டிருந்தார்கள். ஆதாம் ஏவாள் இருவரும் காட்டுக்குள் இருக்கிறார்கள். ஏவாளை ஆதாம் கூப்பிடுகிறார். ‘நீ தேவையில்லை ஆதாம்’ என்றபடிக்கு செயற்கை விந்து டப்பாவை கையில் பிடித்தபடிக்கு ஏவாள் நிற்கிறாள்.

ஏற்கனவே சிங்கிள் மம், சிங்கிள் பாதர் என்று சிந்திக்கத் தொடங்கிய வெளிநாட்டு சமூக அமைப்புக்குள் உடலுறவில்லாத செயற்கை கருத்தரிப்பு அறிமுகமாகி டெஸ்ட் ட்யூப் பேபி என்று வந்து, அதற்கும் ஆணின் உயிருள்ள விந்தினை வயிற்றில் சுமந்து பிள்ளை பெற்றவர்கள் இப்பொழுது ஆண்களின் விந்தே தேவையில்லை எனும் அளவிற்கு கொண்டுவந்து விட்டுவிட்டார்கள் விஞ்ஞானிகள்.

முந்தி ஜீன்களை எடுத்து ஆடு செய்யப்போய் வத்திக்கான் திருச்சபை அல்லலோலகல்லோலப்பட்டதன் பிறகு இப்பொழுது ஒருத்தருக்கும் சொல்லாமல் ஆய்வுக் கூடங்களில் விஞ்ஞானிகள் மறு உருவங்கள் மறு வடிவங்கள் என்று ஒரு செல்லில் இருந்து மறு செல்லுக்கு என்று உருவாக்கிக்கொண்டே இருக்கின்றனர்.
அந்த உருவாக்கம் உலக நியதிகளோடு ஒத்துப்போக மாட்டாது என்று திருச்சபைகள் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன.
இப்பொழுது ‘சிங்கிள் மம்’ போன்றவர்கள் பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் தங்களது கருப்பைக் குடத்துக்குள் இனம் தெரியாத ஆணின் விந்தை வாங்கி அடைகாக்கத் தேவையில்லை.
இயந்திரங்கள் செய்த விந்தை எடுத்து வைத்துக்கொண்டு பிள்ளை பெத்துவிடலாம். எந்தப் பிரச்சினையும் இல்லை. யாரின் விந்து என்று அல்லாடவும் தேவையில்லை.

அந்தரங்கங்கள், அருமையான உடலுறவு எனும் இன்பம் என்பவையெல்லாவற்றையும் மறுதலிக்கும் ஒரு சமூகம் மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது.
செயற்கை விந்தணுவின் மூலம் முழுமையான ஒரு பிரசவத்தை எந்தக் குறையுமில்லாமல் செய்விக்க முடியும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

உடலுறவின் மூலமான தொந்தரவுகள் இல்லை என்றும், ஒருவருக்கு அடிபணிந்து விட்டுக் கொடுத்து வாழவேண்டுமென்ற வாழ்வை விரும்பாத பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமென்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள்.
இந்தச் செய்தி வந்த திங்கட்கிழமை காலை எங்கள் அலுவலகத்தில் இருந்த இருபது வயது பெண்மணி மிகவும் குதூகலமாக இருந்தாள். ‘இனி ஆண்களின் துணை தேவையில்லை’ என்றாள். ‘என்னத்துக்கு’ என்றுகேட்டேன். பிள்ளை பெறுவதற்கு என்றாள். ‘அப்போ செக்ஸுக்கு’ என்று கேட்டேன். அதற்கு மழுப்பினாள். ‘செக்ஸுக்கு ஆண்கள் வேண்டும். ஆனால் கருத்தரிப்பிற்கு செயற்கை விந்தா?’ என்று கேட்டேன். அவள் பதில் சொல்லவில்லை.
லண்டனில் ‘பிக்கட்லி சேக்கஸ்’ எனும் இடம்தான் விபச்சாரிகளுக்கு பேர் போன இடம். இடம் ஊத்தை. அந்த இடத்தில் போய் சுத்தினாலே தெரியும், தம்பி செக்ஸ் செய்யும் பெண்களிடத்துதான் வந்திருக்கிறார் என்று.
எனக்கு எல்லாவற்றையும் இந்த இரண்டு கண்களால் பார்த்து உணரவேண்டும் என்ற அவா இருக்கிறது. ஒரு நாள் அங்கு போனேன். சுற்றிவர செக்ஸ் சாமான்கள் விற்கும் கடை இருக்கிறது.
முதன் முதல் பார்க்கும்போது உண்மையில் அது ஒரு அதிசயம்தான். போய்ப் பார்க்க வேண்டும் ஒவ்வொருவரும். அங்கே மக்கள் வந்து தங்களுக்கான பொருட்களைத் தேர்வு செய்து வாங்கிக்கொண்டு போவதை கொஞ்ச நேரம் நின்று பார்த்தேன், வாங்கும் பொருட்களை. வளைந்து கொடுக்கும் ஆண்குறிகள் பல வடிவங்களில் பல சைஸ்களில் இருக்கின்றன. பிளாஸ்டிக் போன்றவற்றில் செய்து வைத்திருக்கிறார்கள். அதனை வாங்குகிற பெண்கள் பல வயதினர். பிளாஸ்டிக்கால் செய்த, காற்று ஊதிப் பெண்ணாக்கிவிட்டு அதனோடு உடலுறவு கொள்ளத்தக்க பெண்ணுருவங்கள். உயிரற்றவை அவை. ஆனால் தனியே இருக்கும் ஆண்கள் அதனை வாங்கிப் போகிறார்கள் என்றார் விற்பனைப் பெண்மணி. காலையில் எழும்பி மூஞ்சையை நீட்டிப் பிடிக்காது, புறுபுறுக்காது, நகை நட்டு, சாறி, மூக்குமின்னி கேக்காது, சாப்பாடு குடிப்பு தேவையில்லை, உறங்காது இரவு முழுக்க பகல் முழுக்க விழித்திருக்கும் அந்த பிளாஸ்டிக் பெண்மணி. எனவே அது இலகு என்று வாங்கிப் போகிறார்கள் என்றாள் அவள். எலெக்ட்ரிக் பேட்டரியில் இயங்கக்கூடிய ‘வாய்’ போன்ற பொருட்கள், யோனி போன்ற பொருட்கள், முலையைக் கௌவிப் பிடிக்கக்கூடியதும் உணர்வுகளைத் தூண்டக்கூடியதுமான பொருட்கள் செக்ஸ் சம்பந்தமான நூற்றுக்கணக்கான பொருட்கள், மேகஸின்கள், புத்தகங்கள், படங்கள், ஆண்,பெண் நிர்வாணப் படங்கள் வீடியோக்கள், சீடிகள், பாட்டுகள் என்ற எப்பொழுதும் வியாபாரம் நடக்கும் கடைகள் அவை.

லெஸ்பியன், கே எனப்படும் ஓரினச் சேர்க்கையாளர்கள் மட்டுமல்ல சோடி சோடியாகவும் ஆண்கள் பெண்களும் இந்தக் கடைகளுக்கு வருகிறார்கள்.
உடலுறவின் நிலைகளை மாற்றி மாற்றி துய்த்துணர இப்போதைய தலைமுறை பழகிவிட்டது என்பதுதான் அதன் அர்த்தம்.
இது ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்க ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் ஒரு மனிதனின் செல்லை எடுத்து அதேபோல ஒரு மனிதனை உருவாக்க வேண்டும் என்று ஆலாய்ப் பறக்கிறார்கள் விஞ்ஞானிகள். இப்பொழுது மிகவும் கட்டுக்கோப்பான ஒரு இந்து நாடென்று உணரப்படுகின்ற இந்தியாவில் ஓரினச் சேர்க்கைக்கான சட்ட அங்கீகாரம் தொடர்பாகவே எல்லா இடங்களிலும் பேச்சு அடிபடுகிறது.
ஓரினச் சேர்க்கை பற்றி அதன் மன உணர்வுகள் பற்றி அப்படி இல்லாத என்னைப் போன்றவர்கள் முழுமையாக தெரிவிக்க முடியாது. ஆனால் அடிமனதின் உணர்வுகளில் எதிர்ப்பின் மீதான கவர்ச்சியின்மை உணர்ச்சியின்மை பற்றி ஒரு ‘கே’யுடன் உரையாடி இருக்கிறேன். அழகான ஆணைக் கண்டால் அவரோடு உடலுறவு கொள்ளத் தூண்டும் எண்ணங்கள் தனக்கு வரும் என்று சொன்னார்.
ஆண்களுக்கு நல்ல கட்டுமஸ்தான அழகான பெண்ணைக் கண்டால் எல்லாம் துடிப்பது போல; ஒருபால் உறவுக்காரருக்கு அது இருக்குமாம் ஒத்த பாலினைக் கண்டால்.
வெளிநாடுகளில் ஒரு பால் சேர்க்கைக்காரர்கள் ஒன்றாக இருந்து வாழ்கிறார்கள். ஆனால் ஆண் ஒருபால் உறவுக்காரர்களின் பின் வழி மூலமான உடலுறவால் எயிட்ஸ் போன்ற பேராபத்து தொடர்பான அச்சம் வெளிப்படுத்தப்படுகிறது. எச்சரிக்கப்படுகிறது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் அவர்கள் உறவு கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்தியாவில் ஒரு பாலுறவுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சியில் வீதியில் இறங்கிக் குதூகலித்த ஆட்களின் தொகை பிரமிப்பை ஏற்படுத்தியது.
இலங்கையிலும் ஒரு பாலுறவுக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் களவாகவே தங்கள் சோடிகளோடு இருக்கிறார்கள். அவர்களுக்கான சட்ட அங்கீகாரம் தொடர்பாக அவர்களும் சிந்திக்கிறார்கள். கூடித் திருமணம் முடித்து வாழ்வது என்பது ஆங்கிலேய கலாச்சாரத்தில் ஒரு விசயமேயில்லை.
இங்கு சுரங்க ரயில், பஸ்களில் ஆண் ஆண், பெண்பெண் சோடிகள் கட்டிப் பிடித்து உதட்டு முத்தம் எல்லாம் கொடுத்து சந்தோசமாக பயணம் செய்வார்கள். எங்களுக்கு அதெல்லாம் பார்த்துப் பார்த்துப் பழகிவிட்டது.
எனது சின்ன மகள் கூட சொல்வான் அவை லெஸ்பியன் என்று. சில விசயங்கள் ஆரம்பத்தில்தான் ஜீரணிக்க கஷ்டமாக இருக்கும்.
இலங்கையில் எங்கள் கிராமங்களில்கூட ஆண்கள் சின்னப் பையன்களோடு உடலுறவு கொள்வது நடந்திருக்கிறது. அது ஒருவகை உணர்வுகளின் வெளிப்பாடுதான். அவர்கள் ஆண்களோடுதான் சாகும்வரை உடலுறவு கொள்வார்கள் என்றில்லை. வளர்ந்தபிறகு கலியாணம் முடித்து பிள்ளை குட்டிகள் பெத்து இருப்பார்கள். அது ஒரு கவர்ச்சி மட்டும்தான்.
ஆனால் ஓரினச் சேர்க்கையாளர்கள் மறுபாலில் வெறுப்புள்ளவர்கள் தங்களுக்குள்ளே திருமணம் முடித்து உடலுறவு கொண்டு பிள்ளைகளை தத்தெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இப்பொழுது அதீத வளர்ச்சி, தொழில் நுட்பத் தாக்கம், துய்த்து எல்லாவற்றையும் அனுபவித்துவிடத் துடிக்கும் மனம் என்ற விடயங்களால் அன்பு, ஆதரவு என்பன எல்லாம் சிதறிப் போகின்றன. பிரபலங்களுக்கு எல்லாம் இது பெரிய தலையிடிதான். எங்களுக்கு முன்னால்இருக்கும் பெரிய உதாரணம் மைக்கேல் ஜாக்ஸனின் மூன்று பிள்ளைகள். ‘ஜாக்ஸனைப்போல ஒரு சிறந்த அப்பாவை உலகத்தில் நாங்கள் காணவில்லை’ என்று மனமுருகி பிரேதத்துக்கு முன்னால் நின்று அழுதுகொண்டிருக்க ஜாக்சனின் மனைவி ஒரு அறிக்கை விடுகிறார். முதல் இரண்டு பிள்ளைகளும் ஜாக்ஸனுக்குப் பிறந்தது அல்ல. தான் ஜாக்ஸனின் டொக்டரோடு உடலுறவில் ஈடுபட்டுத்தான் பிறந்தது என்று.
பிள்ளைகள் நொறுங்கிப் போய்விட்டார்கள். தந்தை செத்தபிறகுகூட அந்தப் பிள்ளைகளை நிம்மதியாக இருக்க விடுகிறார்களில்லை. இந்தப் பொறிபோதும் மீடியாக்களுக்கு. அந்தப் பிள்ளைகளை வேதனைப்படுத்துவதற்கு.

உண்மையில் உடலுறவின் தாத்பரியம், லிமிட் என்று எதனையும் வரையறுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் சமூகத்துக்குள் இப்பொழுது செயற்கை விந்துகளும் ஊர்ந்து ஊர்ந்து வந்துவிட்டன.
எல்லாம் செயற்கையாகவே போகப்போகிறதா என்று அச்சப்படத்தேவையில்லை என்கிறாள் மனைவி. ஏனெனில் மனம் முழுக்க காதலுடன் செய்யும் உடலுறவுக்கு நிகரில்லை. அந்த இன்பத்துக்கும் ஈடில்லை.

Sunday 16 August 2009

அவருக்கு மட்டுமான சூரியன்

நவஜோதி அகஸ்தியரின் மகள் என்பது மட்டும் கவிதைகளை எழுதுவதற்கான அடையாளம் இல்லை. நவஜோதிக்குள் இருக்கும் ஒரு கவிதைக்குரல்தான் ‘எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்’. அவரது முதலாவது கவிதைகளின் தொகுப்பு இது.
வரலாறும் அனுபவமும் எப்பொழுதும் பண்பட்ட ஆக்க இலக்கியவாதிகளைத் தரும். ‘தீபம்’தொலைக்காட்சியின் இலக்கிய நேரம் பகுதிக்கு ஆர்வமுடன் அவர் எழுதிய கவிதைகள் சிலவும் இதில் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றிற்கு நான் ‘விஷவல்’சேர்த்து அழகு படுத்தியிருந்தேன். மனப்பதிவுகள் மனஅதிர்வுகள் வெளிப்பாடுகள் இவரது கவிதைகளில் இடம் பெற்றிருக்கின்றன.
கவிதைகளுக்கு என்ன வரையறை கொடுப்பது என்பது பலவாறாக விமர்சனத்துக்கு உள்ளாகும் ஒன்று.
எல்லாக் கைகளையும் தட்டிவிட்டு அகல விரித்துக் கொண்டு ‘புதுக்கவிதை தனது ஆழத்தைப் பதித்து ஆண்டுகள் பல.
எமது ஆழ் மனதுக்குள் சிக்காராக உட்கார்ந்து கொண்டிருக்கும் தலைப்பாகைக் கவிஞன் எல்லாவற்றையும் 39 வயதுக்குள் கொண்டு வந்து கொட்டி விட்டான். அவனைவிட வேறு யார் உளர். (பாரதி பிறந்த நாள் - 1882 – டிசம்பர் 11. இவ்வுலகை விட்டுப் போன நாள் 1921- செப்டம்பர் 12.)
இந்தக் குறுகிய காலத்துக்குள் செய்துவிட்டுப்போன கவிதைகளால் மட்டுமே அவன் உலகம் முடியும் வரை வாழுகிறான்.
‘கவிதைகள் என்ன சாதிக்கும்’ என்பவர்களுக்காக சொன்னது அது. ஒரு மனிதனை அழியாமல் வைத்திருக்கும் வல்லமை கவிதைகளுக்கு உண்டு.
ஒவ்வொரு முறையும் பெண்கள் எழுதும்போது என்ன எழுதுகிறார்கள் என்று பார்க்கிறார்கள். எனது செவ்வியொன்றில் பிராங்போட் ரஞ்சனி சொன்னது இன்னும் மனதுக்குள் இருக்கிறது. “பெண்கள் ஆண்கள் என்று என்ன? இரண்டும் சாப்பிடுவது ஒரே மாதிரி குடிப்பது ஒரே மாதிரி சுவாசிப்பது ஒரே மாதிரி பேசுவது ஒரே மாதிரி சிரிப்பது ஒரே மாதிரி கேட்பது ஒரே மாதிரி பின்னரென்ன வேறுபாடு மேல் எண்ணம் ஆண் என்பது” .
“எழுத்துக்கள் என்ன செய்துவிடப் போகின்றன. எவ்வளவு எழுதினோம் எழுதுகிறோம் ஆனால் சமூகம் மாறுகிறதா? என்று எனது பத்திரிகையாளரான எனது நண்பி ஒருத்தி கேட்டாள். “தொடர்ந்து செய்யுங்கள் எங்காவது ஒரு அதிர்வு ஏற்படும் சிலவேளை உங்கள் பார்வை படாத இடத்தில் கூட அது நிகழலாம்”என்றேன்.

கவிதைகளை தொகுப்புக்காக தெரிவு செய்வது எப்படி என்பதில் படைப்பாளிகளின் தைரியம் எந்த மட்டில் இருக்கவேண்டும் எனப்படுவது மிகவும் குழப்பகரமானதாவே இருக்கிறது. பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் பிரசுரமாகும் படைப்புக்கள் கவிதைகள் எல்லாம் தொகுப்பிற்கு எடுபடுமா என்ற அச்சம் இருக்கிறது.
தெரிவு என்பது என்ன? வெளிவந்த கவிதைகள் தானே இவை. எல்லாவற்றையும் தொகுப்பில் சேர்க்கலாமே என்பதுதான் நவஜோதியின் அபிப்பிராயமாக இருந்தது.
பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் பிரசுரமாகும்போது அழகாக இருக்கும் கவிதைகள் தொகுப்பில் வரும்போது அழகாக இல்லாமல் போகின்றதா? அல்லது என்ன?
கவிதைகளை எப்படி எழுதுவது என்பது குறித்து அவரவர்க்கும் ஒவ்வொரு தேவையும் ரசனையும் வெளிப்பாடும் இருக்கிறது.
நவஜோதியின் கவிதைகள் உணர்வுகளின் வடிகாலாகவும் ஆறுதலாகவும் இருப்பதனை உணருகிறேன்..
மன நெருடல்கள் கவிதைகளாகவோ சிறுகதையாகவோ வேறு ஏதாவதாகவோ வடிகாலாய் மொழியாய் பிரிக்கப்படும்போது ஒரு ஆறுதல் வரத்தான் செய்யும். அந்த ஆறுதல்தான்.

‘நானும் உன்னுடன் வந்திருக்கலாமேஎன நினைத்தேன்எவ்வளவு தூரம் வந்தாலும்ஓர் இடத்தில் பிரியத்தானே வேண்டும்அந்த இனிய அனுபவத்தைநெஞ்சில் தேக்கிக் கொண்டேன்புகையிரதம் போய்க் கொண்டிருந்தது.
(உனக்கு நினைவிருக்கிறதா)

ஒரு தேர்ந்த வாசகன் கவிதைகளுக்குள் தன்னை உட்புகுத்தி அதன் இடைவெளிகளை நெருக்கிக் கொண்டு ஐக்கியமாகும்போது கவிதை வெற்றியடைந்து விடுகிறது.
சில வேளைகளில் கவிதைகள் குறிப்பிட்ட எழுத்தாளரின் தன்னுணர்வால் மட்டும் வெளிப்படும்போது அது வாசகனுக்கு சலிப்பைக்கூடத் தந்துவிடும். அதற்காக எதை எழுதலாம் எதை எழுதாமல் விடலாம் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. தரப்படக்கூடாது.
மனத்தின் பாடுகளை கவிதையாக்கி பார்ப்பதுதானே கவிஞனின் வேலை.
உண்மையில் உறவுகள் எமது பூமி தாய் நிலம் பார்க்கும் அவலங்கள் இவைகளை கவிதைகளாக வெளிப்படுத்தும் அற்புதம் கவிஞர்களுக்கு மட்டுமே வாய்த்தது.
எத்தனையோ உணர்வுகளை மனதுக்குள் புதைத்து வைத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் சொல்லத் தெரியாது. ஆனால் உணர்வுகள் இருக்கும் எழுதத் தெரியாது. எத்தனை பேர் மற்றவர்களை ஆகர்ஷிக்கிறார்கள்.
எண்ணிப் பார்த்தால் லட்சக் கணக்கான மனிதர்களுக்குள் ஒரு கவிஞர் உட்கார்ந்திருப்பார். உண்மையில் கவிஞன் ஒரு அற்புதம் தானே.

நெகிழும், மிதக்கும், வேதனைப்படுத்தும், எம்பிக் குதிக்கும் உணர்வுகளை கவிதைகளால் வடிய விடுவது ஒரு ஆசுவசிப்புத்தான்.

பகலில் தேவையில்லாமல்தேய்ந்து விட்டேன்
இரவின் அமைதியை தேடுகிறேன்நிம்மதியை;
இரவின் கருப்பைக்குள் தேடுகிறேன்.நினைத்துப் பார்க்கிறேன்.
வியர்த்தம் தெரிகிறது.போர் கடுமையாக இருந்தபோதுகையில் வரும் வெற்றியின் இனிமைஇஎன்னுள் பிறை தெரிகிறது நான் பிறை கண்டவள் நிலாக் கண்டவள் அல்ல... (இதயத்தின் தவிப்பு)

இது நவஜோதியின் ஆசுவாசிப்பு.


பெரும்பாலான கவிதைகளில் தனிமை மட்டுமே உள்வாங்கப்பட்டிருப்பதும் சில புள்ளிகளை மட்டும் சுற்றி வருவதும் வாசகனுக்கு சலிப்பைத் தரலாம். மொழியின் போதாமை தொக்கி நிற்பதனை குறிப்பிடாமல் செல்ல முடியவில்லை. எனக்கு. ஆழமான வாசிப்பு இன்னும் உள்வாங்குதல் மொழியை செழுமை செய்தல் போன்றவற்றை நவஜோதிக்கு சொல்லக்கூடிய ஒன்று எனலாம்.

கவிதைகளோடு வாசம் செய்வதும் கவிதைகளோடு சயனிப்பதும் எவ்வளவு சுகமானது.லண்டனில் ஒரு நல்ல கவிதை சொல்பவர் கிடைத்திருக்கிறார். அவர் தன்னை வளர்த்துக்கொண்டு முன்னேற வேண்டும்.
கவிஞருக்குள் இருக்கும் இரக்கம், அன்பு, மற்றவரை கனம் பண்ணுதல்,விருந்தோம்பல் என்ற எல்லாப் பண்புகளும் நவஜோதியில் இருக்கின்றன.. ஜோகரட்னத்திலும் அது மிகையாகவே இயல்பாகவே வாய்க்கப் பெற்றிருக்கிறது. இதனை மகிழ்ச்சியோடு சொல்கிறேன்.
free counters

நண்பர்கள் கூட்டம்