Wednesday 13 October 2010
கண்ணுக்குள் நடமாடும் கவி
எனக்குள்ளே என்ன நடக்குது
ஏதோ ஒரு தடவை
என்ன செய்யுதென்று தெரியாமல்
காணக்கிடைக்காத
கரு நிழலை
கண்டு கொண்டேன் நேற்று இரவு.
ஒற்றை நிலா ஒன்று வந்து
ஊரடங்கி போன வேளை
கண்ணிரண்டும் இருட்டாகி...
கரு விழியில் கோடு விழுந்து
சுருண்ட முடி ஒரு சுகம் தானே
வெட்டிப்பேச்சு பேச முடியாதபடி
ஒரு மோன இடைவெளியில்
வெறும் சத்தம் மட்டும்
என் காதில் தானாய் வந்து
சந்தம் எழுப்பி விட்டு மெதுவாய்
அடங்கிற்று.
எங்கிருந்து வந்ததிந்த தற்றுணிவு
எங்கேயோ போய்விட்ட புது நாணம்
கூடவே வந்திங்கு குதூகலித்த
வெண்புரவி ஓங்கி அடங்க
எத்தனை நாழிகை.
கண்ணுக்கு முன்னால்
குனிந்து மேல் தடவி
புதுப்புனுகை யாரோ முகம் பார்த்து
தடவியது போல் எல்லா மன உணர்வும்
கூடிக்குலாவியதே.
அந்தகாரம் இன்னும் வேண்டும்
ஒரு தனிமை போதாது
மீண்டும் மீண்டும் புதுத்தனிமைகள்
காலைச்சுற்றி நக்கியபடிக்கு வேண்டும்
நான்காம் சாமத்தில் மற்றுமொரு பூசை
ஐயகோ பேருவகை கொள்ள பெரு மனது வேண்டும்.
எல்லாக்கண்களும் விழித்திருக்க வேண்டும்.
புலன்கள் பத்தாவது வேண்டும்.
பேருண்மை அறிந்து விட்டேன்.
இதுவேதான் எல்லாம் நீயேதான் எல்லாம்.
உனக்குள்ளேதான் எல்லாம்.
Subscribe to:
Posts (Atom)