Tuesday 10 August 2010

கவிதை



நிதர்சனம்

************

பூட்டோடு வரும்
எவரையும் நிராகரிக்கிறேன்
ஒரு நெருக்குதலையும் சேர்த்து
ஒரு கொலை அல்லது மிரட்டல் அல்லது துப்பாக்கி
எல்லாவற்றையும் மூடி விடும்
என்பது பற்றிய கனவுக்குள் இன்னும்
நான் புதைந்து விடுவதாக இல்லை
ஒரு கண்ணிமைப்புக்குள்
எல்லாம் முடிந்தது என்றுவிட்டு
புறம் தள்ள மனம் ஒப்புதில்லை
ஒரு சக்கரத்தின் இறுக்கத்தில்
மன இழையோடு ஓடும்
வரிகளை அதட்ட மொட்டையாய் சொல்ல
மனம் ஒப்புதில்லை
அந்த திணிப்பு ஒரு கொலை

அது உயிரின் வரிகள் இதயத்தின் ஒழுக்கு
எனக்கான உரிமை என் உணர்வு
எனது எல்லாமே எனக்கானவை

ஒரு கொலைகாட்டி ஒரு பயம் காட்டி
என்னை அச்சுறுத்த உனக்கு யார் உரிமை தந்தது ?
நான் எப்பொழுதும் நானேதான்
அது உன் கண்ணாடியிலும்
முகத்திலும்

2 comments:

ராஜவம்சம் said...

வாழ்த்துக்கள் சகோ.

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு.

free counters

நண்பர்கள் கூட்டம்