
நாக்கு சிவந்த நாய்க்குட்டி அது
எனக்கும் எல்லோருக்குமானது அது.
புலி போலவும் இருக்கும்
சில நேரம் நரி போலவும்
கொழும்பிலிருந்துலண்டனுக்கு
கொழும்பிலிருந்துலண்டனுக்கு
வந்திருந்தது அது.
விமானத்தில் இடம் பத்தாது என்று
கப்பலில் வந்தது அது.
ஒரு மாதம் கடல் காற்றை சுவாசித்ததில்
நாக்கு இன்னும் நீண்டிருந்தது.
எச்சிலிலும் உப்பு இருந்தது
அதன் எச்சிலைஒருநாள்
எனது சின்ன மகள்
சுவைத்து விட்டு சொன்னாள்
ஜிம்மிக்கு உப்பு ஊறுகிறது என்று.
தனிய இருந்த எனக்குநாய்பூனை
பன்றிகளில் ஆர்வமில்லை
என்கொரு காதலி இருந்தாள்
என்கொரு காதலி இருந்தாள்
அவளிடம் ஒரு நாய்க்குட்டி இருந்தது.
சிலோனும் லண்டனும்
நாயால் சேர்ந்திருந்தன.
ஒருநாய்இன்னொரு நாயை முத்தமிட்டது
நாக்கால் முத்தமிட்டதுவெள்ளைக்காரர் போல
எல்லா இடமும்நாக்கு பரந்திருந்தது நாய்க்கு
அதுதான் அவளுக்கும் பிடிக்கும்.
சிலோன் நாய்க்கு
ஒரு சிம்மாசனம்வேண்டுமென்று
மனைவி கேட்டாள்
எனது ஈஸி செயாரை
எனது ஈஸி செயாரை
நாய்க்கான சிம்மாசனமாக்கினாள் மனைவி.
சிலோன் நாயும்
சிலோன் நாயும்
லண்டன் நாயும்
காதலிக்க தொடங்கி விட்டன.
நான் தரையில் படுத்திருக்கிறேன்.
நான் தரையில் படுத்திருக்கிறேன்.
மனைவியும் நாயும்
கட்டிலில்படுத்திருக்கின்றனர்
மனைவி உறங்கி விட்டாள்
மனைவி உறங்கி விட்டாள்
குறட்டை சத்தம் மட்டும்
முழு அறையிலும்கேட்கிறது.
கொர் கொர் கொர்.....................