Friday 8 May 2009

கவிதை

துடிப்பு

அறைகளுக்கு நடுவே
மூச்சடங்கி இருப்பது உயிர்
கண்களுக்குத்தெரியாத
உணர்வுகளினூடு இழைவது
சில முரண்களுக்குள்ளும்
சில சுவாத்தியங்களினூடும்

இணைத்து இணைத்து
இன்னும்இளைத்து விடாத ஒன்று
தானாக பிரிந்து விடத்துடிப்பதும்
வாழுகின்ற போது
ஒரு துளி இன்பத்தையும்
பருகிவிட எத்தனிக்கும்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை கிராகதர்கள்
ஒரு கூட்டமாய்
உயிர் பறிக்க அலைவதும்
கனைப்பதும்
எந்த இடத்தில் ஜனித்ததோ
அதே இடத்தில் பறிப்புமாம்
உயிர் பற்றி அம்மம்மமாவின் கூற்று இது.

சில காட்டிற்கு நடுவில்
சில ஆகாயத்தில்சில தற்கொலையால்
சில பெரிய மனிதரால்
கத்தியால் துப்பாக்கியால்
கோடரியால்
நெருப்பால் சதியால்
விரக்தியால் பொதுமென்றாகி
தானாகி
ஆனாலும் வாழத்துடிக்கிறது
கண நேரமெனினும்உயிர்..

No comments:

free counters

நண்பர்கள் கூட்டம்

Blog Archive