மறதி எப்பொழுதும்
மனிதனை உற்சாகப் படுத்திக் கொண்டே இருக்கிறது
மறதிக்கு மருந்து தேடி ஆலாய்ப்பறக்கிறார்கள்
அது ஞாபகப்படுத்தத் தொடங்கினால்
ஒவ்வொரு மனிதனும்
தினமும் உயிர் விட்டுக்கொண்டே இருக்க வேண்டியிருக்கும்
மறதி
ஞாபங்களை தன்னுள்ளே
புதைத்து வைத்திருக்கும் வேதாந்தி
சில நேரம் எல்லாவற்றையும்
இடம் தெரியாமல் கிளறி விடும்
எதனை ஞாபகப்படுத்த வேண்டுமோ
அதனை அது மறக்கடித்துவிடும்
மறப்பதற்கு முன்னாலும்
ஞாபகம் கொள்ளுதற்கு முன்னாலும்
மறக்கச் சொல்பவர்களுக்கே
மறக்கச் சொல்பவர்களுக்கே
சிலவை கனவாக வந்து வாட்டி விடும்
பத்திரிகைக் காரனுக்கு மறதி வராதாம்
பத்திரிகைக் காரனுக்கு மறதி வராதாம்
ஏனெனில்
அவனது மறதிக் கலங்கள்
எப்பொழுதோ மாண்டு விடுமாம்.
எல்லாம் எப்பொழுதும்
மறக்கச் சொல்லி அடிக்கடி சொல்கிறார்கள்
மறக்காமல் விட்டால் அடிக்கிறார்கள்
மறக்காமல் விட்டால் அடிக்கிறார்கள்
இருட்டில் மறதி சிலருக்கு ஒரு வரப்பிரசாதம்
நிறத்தைக் கூட மறந்து விடுகிறார்கள்
சில வேளை
இது தான் என்று
ஞாபகப் படுத்தினால் தவிர
சிலவற்றை மறந்து விடுவதென்பது இயலாது
எனக்கு முன்னும் பின்னும்
மறதியைக் கூட்டிக் கொண்டே நடக்கின்றேன்.
மறதி எப்பொழுதும் எனக்கு துணைவன் போல
மறதி எப்பொழுதும் எனக்கு துணைவன் போல
No comments:
Post a Comment