Saturday 9 May 2009

கவிதை

மறதி
மறதி எப்பொழுதும்
மனிதனை உற்சாகப் படுத்திக் கொண்டே இருக்கிறது
மறதிக்கு மருந்து தேடி ஆலாய்ப்பறக்கிறார்கள்
அது ஞாபகப்படுத்தத் தொடங்கினால்

ஒவ்வொரு மனிதனும்
தினமும் உயிர் விட்டுக்கொண்டே இருக்க வேண்டியிருக்கும்
மறதி
ஞாபங்களை தன்னுள்ளே
புதைத்து வைத்திருக்கும் வேதாந்தி
சில நேரம் எல்லாவற்றையும்
இடம் தெரியாமல் கிளறி விடும்
எதனை ஞாபகப்படுத்த வேண்டுமோ
அதனை அது மறக்கடித்துவிடும்

மறப்பதற்கு முன்னாலும்
ஞாபகம் கொள்ளுதற்கு முன்னாலும்
மறக்கச் சொல்பவர்களுக்கே

சிலவை கனவாக வந்து வாட்டி விடும்
பத்திரிகைக் காரனுக்கு மறதி வராதாம்
ஏனெனில்
அவனது மறதிக் கலங்கள்
எப்பொழுதோ மாண்டு விடுமாம்.
எல்லாம் எப்பொழுதும்
மறக்கச் சொல்லி அடிக்கடி சொல்கிறார்கள்
மறக்காமல் விட்டால் அடிக்கிறார்கள்
இருட்டில் மறதி சிலருக்கு ஒரு வரப்பிரசாதம்
நிறத்தைக் கூட மறந்து விடுகிறார்கள்
சில வேளை
இது தான் என்று
ஞாபகப் படுத்தினால் தவிர
சிலவற்றை மறந்து விடுவதென்பது இயலாது
எனக்கு முன்னும் பின்னும்
மறதியைக் கூட்டிக் கொண்டே நடக்கின்றேன்.
மறதி எப்பொழுதும் எனக்கு துணைவன் போல


No comments:

free counters

நண்பர்கள் கூட்டம்

Blog Archive