பிணம் செய்யும் தேசம்
இளைய அப்துல்லாஹ்
ஒப்பாரி வைப்பதற்கும்
பெண்கள் இல்லாமல்சிதறிக்கிடக்கின்றனவே பிரேதங்கள்.
எந்த மதிப்பும் இல்லாமல்..
மூத்த பிள்ளை கொள்ளி வைக்க வேண்டுமென்று
ஆசைப்பட்ட அம்மாவின் பிரேதத்தை
யாரோ வந்து எரித்து விட்டு போகிறார்கள்..
வயிறூதி வீங்கி வெடித்து
நிர்வாணமாய் நிணம் வடிக்கும் பிரேதங்கள்..
ஊர் கூடி பாடை கட்டி
மேளமடித்து
ஒப்பாரி வைத்து
சுண்ணமிடித்து
சுடலை போய்
என்றெல்லாம் இல்லாமல்
ட்றைக்டர் பெட்டியில் ஏற்றி மூடி
குழி வெட்டி டிப்பறால் கொட்டி
மண்ணை இழுத்து மூடி……
பிரேதங்கள்புதைக்கப்படகின்றன
வேறென்ன முடியும்
சங்கைக்குரியனவாக இருக்கும்ஒருவர் இறந்தால்
ஊரே இறந்து போனால்….
நாய்களும் நரிகளும் முகர்ந்து பார்க்கின்றன பிரேதங்களை
ஊர் நெடுக பிரேதங்கள்
மண்மூடி மரங்களில் என்றெங்கும் பிரேதங்கள்
எந்த மரணத்தை மதிப்பது
பெண்கள் ஆண்கள் குழந்தைகள்எல்லாவற்றையும் குமித்து வைத்திருக்கிறார்கள்
பிரேதங்களில் பிரிக்க முடியுமா?
சாதியை மதத்தை
ஆணா பெண்ணா என்றேஅறிய முடியவில்லை
பிணக்காடாய் கிடக்கிறது எங்கள் தேசம்..
Tuesday 5 May 2009
Subscribe to:
Post Comments (Atom)
நண்பர்கள் கூட்டம்
Blog Archive
-
▼
2009
(34)
-
▼
May
(19)
- தாலியால் நின்று போன திருமணம்
- (கவிதை) பிணங்களோடே வாழ்தல்
- அஞ்சலி சு வில்வரத்தினம்
- சிறுகதை- ஹிஜ்ரத் அல்லது அகதியாதல்
- எனது தொலைக்காட்சி அனுபவங்களும் இன்னும் உணர்வுகளும்
- கண்ணீரை தின்பவர்கள்
- கவிதை ருசி
- கவிதை
- கவிதை
- கவிதை
- படம் சொன்ன கதை
- சிறுகதை - லண்டன் அகதி
- எங்களது வீடுகளைத் தாருங்கள்
- பிணம் செய்யும் தேசம்
- பெண்ணாய் பிறந்ததாலோ
- அப்பாவின் மரணம்
- கென்டயினர் பயணம்
- ஆதிவாசி தலைவர் தபெல் பண்டாவை சந்தித்த ஒரு தருணம் ...
- கவிதை அபகரிப்பு
-
▼
May
(19)
No comments:
Post a Comment