
எரியும் தணலிடையுன்ஊனுருகிப் போனது
உன் பால் பீச்சி
என் முகம் நிறையும்உன் சிரிப்பு.
உன் பெரிய முலையிடுக்கில்
முகம் புதைத்தழுவேன்
கோதி மடிமீதுஉச்சி மோர்ந்து....
சோர்வென்பது என்னம்மா?
துப்பாக்கி தொட்டிறக்கி
அநீதி பற்றி எப்போதும்ஓதிக் கொண்டிருப்பாய்....
என்னலைச்சல் மீதுஉனக்கும் சுமை.
உன்மீது
எனக்குக் கோபமே வராத
அந்த ஒரு மணி நேர இரவில்....
என் வேதனைக்கு ஈரலிப்பு வந்து விடுகிறது
பொதும்பிய துவாலையின்வழிஉருகி
எரியிடைவளரும் தீயெனஉன் பூமுகம்...!
அம்மா!எப்பிறவியில்அநியாயம் இழைத்தேன்?
இழிந்து உருக்குலைந்து
சிதிலமாகிப் போனஉன் மார்பையும்
முகத்தையும்உடலையும்
முதலைப்பால இடிமதகினிலிருந்து
அள்ளி அணைத்துக் கொண்டு
கதறி அழுவதானபொழுதை அடைந்தேன்.
காற்றில் வரும்துர்வாடை மறந்து....
No comments:
Post a Comment