Sunday 10 May 2009

கவிதை ருசி

ருசி



அட்டைக்குத்தெரியும்
என் ரத்தத்தின் ருசி
கண்ணுக்கெட்டும்வரை காடுகள்
காடுகளின் மணம் ஒரு உச்சாய்ப்பானது
மணக்கவென்றே காடுகளுக்குள் செல்கிறேன்
பாம்புகளின் கொட்டாவி
சில் வண்டுகளின் மூச்சு
தேளின் சுவாசம்
யானையின் மணம்
குழுமாட்டின்வாடை
மான் மரை சருகுகள் பூக்கள்
மூலிகை பச்சிலை ஆறு பனி
எல்லாம் கலந்த கலவை காட்டின் மணம்
இத்தனை மணங்களையும்
பிரிக்கஉணர் கொம்புகள் இல்லை என் மூக்கிடம்
ஒன்றான சுவாசத்தை உள்ளிளுக்கும்
ஒற்றை உணர்வோடு திரிகிறேன்
இயலாமையின் வடிவத்தோடு
பூமியின் அத்திவாரம் காடு
'ஆபத்தானவை காடு ' என்று எழுதிவைத்தவனை சபித்தேன்.
என் மனதோடு சேர்ந்து
நடுக்காட்டுக்குள்செல்பவர்கள் எவரோ வாருங்கள்!
ஒரு நண்பனைப்போல காடு.
பயப்படுவதற்கு மனிதனுக்கு மட்டும்தான் தெரியும்
மனிதனைத்தவிர வேறு எதுவுமே அச்சமடைவதைக்கண்டதுண்டா ?
காலில் இரத்தம் வருகிறது
ஒரு பாம்பு எனது இரத்தத்தை
தனது நாக்கால் சுவைத்தது..
காடு எவ்வளவு அழகானது.

No comments:

free counters

நண்பர்கள் கூட்டம்

Blog Archive