அட்டைக்குத்தெரியும்
என் ரத்தத்தின் ருசி
கண்ணுக்கெட்டும்வரை காடுகள்
காடுகளின் மணம் ஒரு உச்சாய்ப்பானது
மணக்கவென்றே காடுகளுக்குள் செல்கிறேன்
பாம்புகளின் கொட்டாவி
சில் வண்டுகளின் மூச்சு
தேளின் சுவாசம்
யானையின் மணம்
குழுமாட்டின்வாடை
மான் மரை சருகுகள் பூக்கள்
மூலிகை பச்சிலை ஆறு பனி
எல்லாம் கலந்த கலவை காட்டின் மணம்
இத்தனை மணங்களையும்
பிரிக்கஉணர் கொம்புகள் இல்லை என் மூக்கிடம்
ஒன்றான சுவாசத்தை உள்ளிளுக்கும்
ஒற்றை உணர்வோடு திரிகிறேன்
இயலாமையின் வடிவத்தோடு
பூமியின் அத்திவாரம் காடு
'ஆபத்தானவை காடு ' என்று எழுதிவைத்தவனை சபித்தேன்.
என் மனதோடு சேர்ந்து
நடுக்காட்டுக்குள்செல்பவர்கள் எவரோ வாருங்கள்!
ஒரு நண்பனைப்போல காடு.
பயப்படுவதற்கு மனிதனுக்கு மட்டும்தான் தெரியும்
மனிதனைத்தவிர வேறு எதுவுமே அச்சமடைவதைக்கண்டதுண்டா ?
காலில் இரத்தம் வருகிறது
ஒரு பாம்பு எனது இரத்தத்தை
தனது நாக்கால் சுவைத்தது..
காடு எவ்வளவு அழகானது.
காடு எவ்வளவு அழகானது.
No comments:
Post a Comment